Sunday, May 22, 2011

புதிய லேப்டப்: கூகுள் அறிமுகம்



இணையப் பாவனையாளர்கள் மட்டுமின்றி புதிய பல்வேறு விடயங்களில் இன்று முன்னிலையில் உள்ள கூகுள் நிறுவனம் புதிதாக புதியவகையில் ஒரு லேப்டப்பை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள் இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர். இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

குறை அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் கூகுளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

விமர்சனம் இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் கூகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்

இலட்சக் கணக்கானோரின் பொதுப் பிரச்சினையான முதுகு வலிக்கு ஜெல்! பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை


முள்ளந்தண்டில் ஏற்படும் பாதிப்புக்களால் தோன்றும் முதுகு வலிகளுக்கு எவ்வளவுதான் மருந்து குடித்தாலும், அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிவாரணத்தை அளிக்காது. இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இவர்களுக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிதாக ஒரு ஜெல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஆயிரக்கணக்கான நுண் சேர்க்கைகளைக் கொண்டது. உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டதும், இந்த நுண் துணிக்கைகள் உடலுக்குள் ஒன்றுசேர்ந்து முள்ளந்தண்டுத் தட்டுக்களில் ஏற்பட்டுள்ள பாதுப்புக்களை சரி செய்யக்கூடியது. பிரிட்டிஷ் மக்களுள் 80 சதவீதமானவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் முதுகு வலியால் அவஸ்த்தைப் படுகின்றனர்.
பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை இது தாக்குகின்றது. முள்ளந்தண்டில் மிகவும் மோகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி மட்டுமே சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகின்றது . இவ்வாறான சத்திர சிகிச்சையின் பின் நோயாளி குணமடையவும் நீண்ட காலம் செல்லும். ஆனால் இந்தப் புதிய ஜெல் ஊசி மூலம் ஏற்றப்படுவதன் மூலம் நோயாளி ஓரிரு தினங்களில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்து விடுகின்றார். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் பின் இந்த ஜெல் வெற்றியளித்துள்ளது. கோடிக் கணக்கான துணிக்கைகள் திரவ வடிவில் உடலுக்குள் செலுத்தப் பட்டதும் அவை உடலுக்குள் ஒன்று சேர்ந்து ஜெல்லாக மாறி உரிய பலனை அளிக்கின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

நன்றி:Tamillcnn.com