Saturday, May 10, 2008

தமிழன்

கல்தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே தோன்றியும் கூட இருக்க இடமின்றி இன்னமும் அலைத்துக்கொண்டிருக்கும்அவலப்பிறவி...

இவ்வுலகில் இவனுக்கென இல்லை ஒரு நாடு.. ஆகியும்இவன் இல்லாத நாடு ஏது?..

பூலோகத்தில் அழிந்து கொண்டிருக்கும் உயிரினம்பண்டா கரடிகள் மட்டும்தானா...இவனும் தான்..

நாடோடியாகத்திரிந்தாலும் உறவுளைப்பிரிந்தாலும்கலாச்சாரத்தை மறக்காத இவன் மனம்.

இனவெறியர்களின் வேட்டையில் இனந்தெரியாமல்அழிந்துகொண்டிருக்கும் எமது இனம்சனம்.

வெகுண்டெழுந்த இவ்வீரவேங்கைகள் வெற்றிவாகை சூடும் பொன்னாள்வரை தீராது தமிழனின் தாகம்.....

2 comments:

தமிழன் said...

ஈழம் மலரும் தமிழர் உள்ளம் குளிரும். வாழ்த்துகள் விகடகவி

Keddavan said...

நன்றி தீலிபன்..