Sunday, May 25, 2008

குமரக்குறும்பு (கலக்கலான கற்பனை)


சிறுவயது முதல் முருகன் மீது எனக்கு பக்தி அதிகம்.

அவனை என்னிடமிருந்து பெரியவனாக்கிப்பாராமல் என் நண்பனாகவும் விளையாட்டுத்தோழனாகவுமே கருதியிருந்தேன்.
கையிலே கந்தசஷ்டி கவசம்..அயர்வாக இருந்ததனால் சிறிதே கண்ணயர்ந்தேன்.
என்னை ஏதோ ஊடுருவதைப்போன்ற உணர்வு திடுக்கிட்டு கண்விழித்தேன். எங்கும் புகைமூட்டம்.அடுப்பிலை எதாவது மறந்து வைத்துவிட்டேனோ என சமயலறையை நோக்கி செல்கையில்

'பக்தா..இங்கே வா..' என்று ஒரு குரல் என்னை அழைத்தது..

புகைமூட்டத்துக்கு மத்தியிலே இராஜஉடை அணிந்து கையிலே வேலுடன் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.

அவனருகில் சென்ற நான்'அண்ணே நாடகத்திலிருந்து வேசத்தை கலைக்காமலே ஓடிவந்து விட்டீர்களா? இது நாடகக்கம்பனிஇல்லை எனது வீடு' எனக்கூறினோன்.

அவசரப்படாதே பக்தா நான் தான் பரமசிவனின் மைந்தன் முருகன்.என்றான் அவன்.

' ஹா ஹா ஹா.. இதை நம்ப நான் என்ன கேனப்பயலா..
எத்தன பக்திப்படங்களை பார்த்திருக்கிறம். அதில எல்லாம் கடவுள் வந்தவுடன் அட்டகாசமாய் கெஞ்சநேரம் சத்தம் போட்டு சிரிப்பாங்க...
நீ என்னடா என்றால் சத்தமில்லாம தீடீரென்று வந்து நிக்கிற உன்னை எப்படி நம்பிறது.. 'பக்தா உன் நம்பிக்கையை வரவலைக்க நான் என்னதான் செய்ய வேண்டும்' என அமைதியாக கேட்டான்.

முருகா..முருகா... பெரிசா ஓன்றும் கேட்கலை. நீ கெஞ்சம் கிராப்பிக்ஸ் செய்துகாட்டு அது போதும்..'
'
கிராப்பிக்ஸா?..'

ஆமா!... பக்திப்படங்களிலேல்லாம் கடவுள் கிராப்பிக்ஸ் செய்வாங்க..பத்து தலை இருபது கை ஏழேட்டப்பிரிஞ்சுடான்ஸ் எல்லாம் ஆடுவாங்க..புதுசு புதுசா மஜிக் எல்லாம் செஞ்சுகாட்டுவாங்க....நீயும் அப்படி செஞ்சுகாட்டினா தான்உன்னை நம்புவேன்..

'பக்தா...நான் இன்றைக்கு அதுக்கு எல்லாம் லீவு விட்டுவிட்டுதான் உன்னைப்பார்த்து ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன்.வீணாக தொந்தரவு பண்ணாத..வேணுமின்னா இன்னொரு நாளைக்கு தேவதூதனிடம் CDஜ கொடுத்து அனுப்புகின்றேன் போட்டுப்பார்...'என்றான்.

'அது சரி முருகா நீ ஏன் இப்படி மெலிஞ்சு போயிருக்கின்றாய்..வள்ளி , தெய்வானை இருவரும் உன்னைக் கவனிப்பதில்லையா?..'

'அதை ஏன்பா கேட்கிறா.இரண்டு பேரும் எப்பபர்த்தாலும்.TV சீரியல் பார்த்திட்டு அழுதுகிட்டிருக்காங்க..சாப்பாடு கூட ஒழங்காககிடைக்கிறதில்லை..'

ஏன் முருகா உனக்குத்தான் கோயில்ல விதவிதமா நைவேத்தியம் படைக்கிறார்களே.அதை சாப்பிடுவதில்லையா?..'

'அடப்பாவி எத்தனை நாளைக்குக்தான் பொங்கலையும் ,வடையும் , புளிச்சாதத்தையும் சாப்பிடுறது.சலிச்சுப்போச்சு. நீங்க மட்டும் டிசைனாக சாப்பிடுறிங்க.என்னாங்கடா இது நியாயம்..'

'முருகா எங்கே உன் மயில்வாகனம் ஏன் அதில் ஏறிவந்து எனக்கு காட்சி தரவில்லை!..'

'ஏதோ சின்ன வயசில ஆசைக்கு மயிலில ஏறி போஸ் கொடுத்தா அதையோ வாகன மாக்கிறாதா..நீயே சொல்லு இப்ப நான் மயில்மேலஏறினா அது செத்துப்போகாதா..?' இப்ப என்னோட வாகனம் வேற்றுக்கிரகவாசிகளின் வாகனம் என்று சொல்லுகிறீர்களோ அதுதான்..அதுலதான் நான் இப்பூலோகத்தை ரவுன்ட் அடிக்கிறனான்.'

'முருகா.உன் அண்ணன் கணேஷன் எப்படி இருக்கிறார்?..'

அதை ஏன்பா கேட்கிறா.அவருக்கு ஏற்கனவே பருத்த உடம்பு இவங்கவேற கொழுக்கட்டை , மோதகம் போல இனிப்பு அயிட்டங்களைகொடுத்து கொடுத்து அவருக்கு சுகர் பிராபளம் வந்திருச்சு...பாவம் எலியையும் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரியும் கையுமா அலைஞ்சிட்டிருக்காரு..'

'முருகா.. உனது தந்தையும் தாயும் எப்படி இருக்கிறார்கள்?...'

அவங்களுக்கென்ன திருவிளையாடல் படத்தைப் போட்டுப்பார்த்து பழைய நினைவுகளை மீட்டுக்கிட்டிருக்கிறாங்க..

'நடராஜார் ஆனந்த தாண்டவம் ஆடுவதில்லையா?...'
சொல்ல மறந்திட்டேன் அவர் இப்ப தேவலோகத்தில் டான்ஸ் கிளாஸ் நடத்திட்டு இருக்காரு..சரஸ்வதி டீயூசன் நடத்திறா..லட்சுமி தான்கல்லாப்பெட்டியை பார்த்துக்கிறா..

'முருகா.... உனக்கு ஏன் பிள்ளை பிறக்கவில்லை?..'

'ஓ... அதுவா.. ஏற்க்கனவே தேவலோத்தில் சனத்தொகை கூடிவிட்டது விட்டால் கடவுள்கள் மனிதர்களை விட கூடுதலாகி விடுவார்கள்..அதனால்தான் நான் குடும்பக்கட்டுபாட்டு முறையை பயன்படுத்துகின்றேன்...'

'ஆமா!.. முருகா ஏன் இந்த வேலினை கையிலே வைச்சிட்டுருக்கிறிங்க..'
'இதை என்னவென்று நினைத்தாய் 24கரட் கோல்ட் இப்ப திருட்டுப்பசங்க அதிகமாயிட்டங்க..அதனால்தான் கவனமாக கையிலயேவைச்சிட்டுருக்கேன்...எப்படி?... என் அறிவு...'

'ஏன் முருகா நீ நாகரிகமான நவீன உடைகளை அணிவதில்iலை?..'

'அடப்பாவி!.. அதை ஒருக்கா கேட்கப்போய்தான் என்ன கோமணத்தோட பழனியில நிக்க வைச்சிடாங்க.. இருக்கிறதே போதும்டா சாமி..!'

திடிரென்று தொலைபேசி மணி அலரும் சத்தம் கேட்டது..எங்கே என்று நான் தேடிப்பார்க்கும் முன்பு... முருகன் தனது கைத்தொலைபேசியைஎடுத்து காதில்வைத்து ஏதோ பேசினார்..

'பக்தா.. நேரமாகிவிட்டது. கைலாயத்தில் ஒரு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கிறது..போய் வருகிறேன்..Bye Bye எனக்கூறி மாயமாக மறைந்தார்..திடுக்கிட்டு எழுந்தேன் கந்தஷடிக் கவசம் என் கைகளில் தவழ்ந்தது..

12 comments:

Keddavan said...

இந்தக்குறுங்கதையை 6 வருடங்களுக்கு முன் கல்லுரி வார வெளியிட்டுக்காக எழுதினேன்.இப்பொழுது மறுபடியும் வலைத்தளத்தில் தருகின்றேன்..

Anonymous said...

hi rajeevan,,kadavulkalin MODERN vaalkai kathai....very nice,,

Anonymous said...

shaaaaaaaaaaa superb one of da best katpanai kadhai ......... kadavul ipudi iruparunu na edhir pakala. ino neraya eluthunga

Anonymous said...

shaaaaaaaaaaa superb one of da best katpanai kadhai ......... kadavul ipudi iruparunu na edhir pakala. ino neraya eluthunga

KARTHIK said...

நல்லாருக்கு ரஜீபன்.

Anonymous said...

hi rajeevan unke murukan sorry is verry nice , i like your storry innum koode elunthunke unkelukku rompa nalla ethirkalam irukku unke jokes ellame super weiter so viel glück wunsch

Keddavan said...

நன்றி கார்த்திக், நன்றி நண்பர்களே..

Anonymous said...

***ஏன் முருகா நீ நாகரிகமான நவீன உடைகளை அணிவதில்லை?***


நீங்கள் கேட்ட அனைத்துவிதமான கேள்விகள் எனது மனதில் தோன்றினாலும் மேற்குறிப்பிட்டவை சம்பந்தமான எனது கேள்வியானது என்னவென்றால், இந்து சமயம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்திற்கு உட்பட்டது எனக்கூறும் இணைய பதிவர்கள் சிலர் ஏன் கடவுளின் உடை விசயத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் (மாற்றத்திற்கு உட்பட்டது என கூறுவதுடன் சரி, எதையும் மாற்றியதாக வரலாறு கிடையாது) அப்படியே இன்னும் உள்ளாடையுடனே காட்சி அளிக்கின்றார் எனவும் கேட்டுச் சொல்லவும்.

நன்றி
அனானி.

Keddavan said...

நன்றி நண்பரே...இதைப்பற்றியும் கேட்டுப்பாத்தேன்.அவர் சொன்னர் சொர்க்கலோகத்தில் Ftv இல்லையாம்
ஒரு சினிமா இல்லையாம்.. இணையத்தளவசதி கூட இல்லையாம். இப்படி இருக்கையில் எதைப்பார்த்து நாகரிகத்தை கற்றுக்கொள்ளுவது எனத்தெரியாமல். கடவுள்கள் பழைய styleயே இருக்காங்களாம்.. நீங்களாவது அவர்களுக்கு உதவகூடாதா?....

U.P.Tharsan said...

தல உங்களால் எப்படி இப்படி எல்லாம் முடியுது.

Anonymous said...

superw da nice

Anonymous said...

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி உனக்கு கேலி செய்ய முருகனா?First you let me to tell something about the tamizh God muruga Like you all guys are thinking He is the son of Lord siva and parvathi brother of ganesha son in law of vishnu and husband of valli and deyvanai these everything absolutely false and this is the handiwork of aaryas
Before aaryas period that means thiravida period there was no hindu religion
In Tamilnadu the religion name is Kumaram God Muruga
In Maharashtira the religion name is Ganapathyam God Ganapathy
In West bengal the religion name is Saaktham Lord Sakthi
In Northern end of India the religion name saivam Lord siva
In middle india the religion name is Vainavam Lord vishnu
In North east india the religion is nature God all nature powers and they worshiped Rain Fire Snake even thunder also
Once aryaas invaded india and conquered the ethynic people of india they want to unify the india in one religion that why they themselves created this relationship between the Gods and made it as Hindu religion. Before krishnadevarayar rule in tamilnadu there was no prahmin poojari in tamil murugan temples (palani temple and the murugan idol made by bogar alias siddar)Upon Krishna devaraya period one prahmin cheif minster ruled tamilnadu one day he visited to palani temple and noticed pandaram poojaris performing poojas for lord muruga he already heard and realised the power of muruga that why he himself decreed to replace pandaram with prahmin poojaris in all murugan temples.
So like allah for muslim
like jesus for christian
Lord Muruga is only one god of tamils He has no father or mother he has no wives he has no brother or father in law
He is ethynical He is eternal He is immortal
In weblog you introduced your self as a hindu and most probably you should be a tamilian Now I ask you
Do you have the potential or guts to criticize allah or jesus Never
but being as a tamilan you critizing lord muruga like any thing and some of dopes also they also socalled tamilians concurred you and sent their feed back also guys like you no need to worship lord muruga but atleast dont criticize our tamil god and dont hurt the real devotees of lord muruga Hope you all guys mend your mind