Friday, December 11, 2009

போட்டோ சோப் கலாட்டா பாகம் 2



இப்படியெல்லாம் டகால்டி வேலை பார்த்த தான் நாலு போரு நம்மல மதிப்பாங்க..ஓவரா படிச்சா இப்படித்தான்...


சமத்து கரடியில்ல நீயாவந்து இந்த கூண்டுக்குள்ள புகுந்துக்கோ...

இப்படி ஒரு கம்பியுட்டர் எங்கவிக்குது என்று சொல்லுங்க?எனக்கும்
ஒன்று வேண்டும்..
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்..அப்ப நானும் சிங்கம்தானே?..

எவண்டா அவன் குருவி விஜய்...அவனைப்பழிவாங்காம விடமாட்டன்..

எனக்கா சூடுவைக்கிற..உனக்கு வைக்கிறன்டி ஆப்பு...

இன்னைக்கு எந்த முஞ்சியை வைச்சிட்டு கடன்காரன் முகத்தில முழிக்கலாம்..


Tuesday, December 8, 2009

பேஸ்புக்கை கலக்கும் சோசல் கேம்ஸ் (Social games)




இன்றைய இளைஞர்கள் தமது நண்பர்களை நேரில பார்க்கிறாங்களோ..இல்லையோ...பேஸ்புக்கில் சந்தித்து அரட்டை அடிக்க மறப்பதில்லை..இணையத்தின் மூலமும் மொபைலின் மூலமுமாக அவர்களது வாழ்க்கையின் ஆழஊடுருவி விட்டது இந்தசமூகத்தளம்..

இப்பொழுது புதிய வரவான இந்த சோசல்கேம்ஸ் (Social games) எனப்படும் விளையாட்டுக்கள் இளையர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகி உள்ளன..எங்கு பார்த்தாலும் இதனைப்பற்றிய கதைதான்..பல 3d Animation games இலவசமாக கிடைத்த போதும்..இந்த சிறிய பிளாஸ்கேம்ஸ்சிற்க்கு(Flash games) கிடைத்திருக்கும் வரவேற்ப்பு அளப்பரியது..இதற்க்கு முக்கிய காரணம் மற்ற விளையாட்டுக்களைப்போல நாங்கள் கணனியுடன் விளையாடாமல் இதில் எமது நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடகூடியதாக இருப்பது தான்..

இன்று இந்தவரிசையில் பிரபலமாக இருக்கும் சில விளையாட்டுக்களைப்பற்றி
பார்ப்போம்..




இதில் Farm Games எனப்படும் விளையாட்டுக்கள் எமது நண்பர்களினால் அதிகம் விரும்பி விளையாடப்படுகின்றுது..இதில் என்ன விசேடம் என்றால் நீங்கள் ஒரு பயிரை நட்டுவிட்டால் அது வளர 1 நாள் அல்லது 2 வரை நேரம் எடுத்துக்கொள்ளும்..பசலை போடுவதன் விரைவாகவளர்க்க முடியும்..அத்துடன் நண்பர்களின் தோட்டத்திற்க்கு சென்று அவர்களுக்கு களைபிடுங்கி உதவவும் முடியும் அல்லது நன்றாக வளர்ந்த பயிரை திருடிசெல்லவும் முடியும்..இறுதியில் பயிரை அறுவடை செய்து சந்தையில் விற்று அதன்ழூலம் வரும் பணத்தின் ழூலம் காணி வீடு பசலைகள் எல்லாம் வாங்கி முன்னேற வேண்டும்..பல நண்பர்களை பேஸ்புக்கின் அரட்டையின் ழூலம் மச்சான் என்னடா செய்திட்டிருக்க?..என்று கேட்கும் போது விவசாயம் பண்ணீட்டு இருக்கண்டா என்று பதில் சொன்னர்கள்..நானும் ழுதல்ல புரியாமா முளிச்சிட்டு இருந்தன்..பின்பு தான் இதுதான் விடயம் என்று அறிந்து கொண்டேன்..நீங்க தயாரா விவசாயம் செய்து பார்க்க?...

Monday, December 7, 2009

இசைமேதைகளுக்கு எல்லை உண்டா?..

ஒரு சில இசைவாத்தியங்களை முறையாக இசைக்கப்பழகுவதற்க்கே படதாபாடுபட்டுக்கொண்டுருக்கின்றோம்..ஆனால் இவர்களின் இசைக்கு இருக்கிற வாத்தியங்களே போதவில்லை..இவங்கள்ளாம் நம்ம சிவமணி கட்சிக்காரங்க...



இவரு மரம் செடி கொடிகளையும் விடவில்லை..


இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்தா ஆஸ்கார் கொடுப்பாங்களா?...


இந்த சைனாக்காரர் வீட்டில உட்காந்து எந்த நேரமும் மரக்கறி வெட்டுவாராம்..சமைக்கிறதுக்கு இல்லை இசைக்கிறதுக்கு.

இந்த உணவகத்தில் இலவசமாக கொடுத்தாலும் சாப்பிடுவீங்களா?...

> உணவு உண்னும் நேரத்தில் யாராவது கழிவறையைப்பற்றி கதைத்ததால் கூட பலருக்கு குமட்டல் வந்துவிடும் ஆனால் இங்கே ஒரு உணவகத்தையே கழிவறை மாதிரியாக வடிவமைத்துள்ளார்கள்...


நான் ரசித்த காதல் கவிதைகள் பாகம் 3


* இந்த மலையைக் குடைந்து ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா உன் கல்மனசுக்குள் நுழைவது எப்படி என்பது.

* உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறது உன்னை நேசிக்கிற என்னை மட்டும் சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.

* நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறது. சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில் எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

* துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

* சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறது என்றாலும் நீ வரும்போதுதான் விழிக்கிறது இந்த வீதி.

தபுசங்கர்

Sunday, December 6, 2009

நான் ரசித்த காதல் கவிதைகள் பாகம் 2


* நீ என்னைக் காதலிக்கிறாயா என்பது புரியாத அந்த ஆரம்ப நாட்களில் ... தெரியாத்தனமாக நீ அணிந்திருந்த உடையின் வண்ணத்தில் என் சட்டையின் வண்ணம் இருந்ததைக் கவனித்த என் அயோக்கிய நண்பன் ஒருவன் 'டேய் என்ன இரண்டு பேரும் ஒரே கலரில்...' கிண்டல் செய்துவிட அப்போதே அவனைத் திட்டினேன் ... அவ்வளவு மகிழ்ச்சியாய்த் திட்டமுடியுமா என்கிற ஆச்சரியத்துடன்.
அதன் பிறகு அந்தச் சட்டையைப் போடவே கூச்சமாய்ப் போய் பெட்டியில் ஒளித்து வைத்துவிட்டேன் ... என்று நான் இப்போது சொல்லிக்கொண்டிருக்கையில் நீ முகத்தை மூடிக்கொண்டாய். ஏன் என்று கேட்டதற்கு ' நானும் அப்படித்தான் ஒளித்து வைத்துக் கொண்டேன்' என்கிறாய்.

* கும்பலில் எல்லாம்
நீ போகாதே . . . யார் யாரோ மிதிக்கிறார்கள் உன் நிழலை.

* தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது

*புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன். உனது விழியின் ஈர்ப்பு விசையில் எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்.

*தெய்வமே..
உன்னை என் இதயத்திலிருந்து வெளியேற்றிவிட்டு. ஒரு பெண்ணைக் குடிவைத்தற்க்காக கோபித்துக்கொண்டு என்னைக் கைவிட்டு விடதே!.. உன்னால் தூ ணிலோ துரும்பிலோ கூட வாசம் செய்யமுடியும். அவளால் முடியுமா?

தபுசங்கர்