Friday, July 8, 2011

சிரிப்பு வருது சிரிப்பு வருது...


பாலு:-நான் எதாவது தப்புசெய்தால் எங்கப்பாவுக்கு மூக்கு மேலே கோபம் வரும்!
முரளி:-இது என்னடா அநியாயமா இருக்கு!..
பாலு:-எதுடா அநியாயம்?
முரளி:-பின்னே நீ தப்புசெஞ்சதுக்கு உன்மேலேதானே கோபம் வரணும் மூக்கு மேலே கோபப்படறாரே!..

முரளி:-கோழியோட ஆயுள் எத்தனை நாள் தெரியுமா?
பாலு:-அட, இது கூடத்தெரியாதா!விருந்தாளிங்க வரும் வரைக்கும்!


மாஜிக் நிபுணர்:-ஹலோ, பெண்ணே, மேடைக்கு ,வா என்னை இதற்க்கு முன் உனக்குத்தெரியுமா?..
சிறுமி:தெரியாது ,அப்பா!..


டாக்டர்: நான் கொடுத்த இரும்புச்சத்து மாத்திரையை ஏன் சாப்பிடவில்லை!
பாலு:அவை டூப்ளிகேட் என்று நினைக்கிறேன்!
டாக்டர்:எப்படிச் சொல்லுகிறாய்?
பாலு:அவற்றைக் காந்தம் வைத்துப்பரிசோதித்தேன்.காந்தம் மாத்திரையைக் கவரவில்லையே!..


சிறுமி: அம்மா நான் பிறக்கிறதுக்கு முன்னாலேயே என்னைப் பார்த்திருக்கியா?
தாய்:இல்லையே!..
சிறுமி:அப்புறம் எப்படிப்பிறந்ததும் நான்தான் உன்பொண்ணுன்னு கண்டு பிடிச்சே!..

பாலு:ஒரு வருஷம் நான் நடக்க முடியாமல் இருந்தேன்!
முரளி:அப்படியா எப்போது?
பாலு:நான் குழந்தையாக இருந்தபோது!.


பாலு:பிறந்தநாள் அன்று நாம ஏன் கேக்கை வெட்டுகிறோம்?
குமார்:எதற்க்கு எல்லோரும் சாப்பிடுவதற்குதான்!
பாலு:இல்லை.நாம் ஏன் கேக்கை வெட்டுகிறோம் என்றால், எல்லோருக்கும் முழு கேக்கைக்கொடுக்க முடியாது என்றுதான்!..


முரளி: என்னடா பாலு டிக் ஷனரியைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறாய்?..
பாலு:நான் எப்போ சிரித்தாலும் அர்தத்தோடுதான் சிரிப்பேன்!..