Saturday, December 19, 2009

தர்சனின் காதல்கவிதைகள்..


பல்லாண்டுகளுக்கு முன்னர் U.P தர்சன் எனும் பதிவர் பதிவெழுதிவந்ததாக அவரது பழையபதிவுகளை பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள்...அவர் பதிவுலகில் பெண்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக பதிவுலகைவிட்டு விலகி பலகாலமாக வனவாசம் Sorry வீட்டுவாசம் இருக்கின்றார்..ஆடியகால்களும் எழுதியகைகளும் சும்மாயிருக்குமா?..அவரது இன்றைய பொழுது போக்கு என்ன தெரியுமா?..பல பெண்களை இவர்பின்னால் சுற்றவைப்பதுதான்..கூடிய சீக்கிரம் அவங்களெல்லாம் சேர்ந்து இவருக்கு ஜேர்மனியில் ரசிகர்மன்றம் அமைத்தாலும் ஆட்சரியப்படுவதற்க்கில்லை..

ஒரு நாள் இதைப்பொறுக்காத நான் அவரிடம் கேட்டேன்..எப்படி மச்சான் எங்களையெல்லாம்.ஒருத்திகூட திரும்பிப்பார்க்கிறாள் இல்லை உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் செய்யமுடியுது என்று...அதற்க்கு அவன் சொன்னான்..மச்சி அதுக்கெல்லாம் ஒரு தோற்றம் வேணும்டா..இப்ப என்னப என்னப்பாரு மாதவன்ட தம்பிமாதிரி இருக்கனில்லை..சரி அந்த கருமம் தான் உன்னட இல்லையே... சரி என்னுமொரு ஜடியா சொல்லித்தாறன்...என்று சொல்லி ஒரு டயரிய என்னிடம் தந்தார்..அதில இருக்ககவிதைகள் எல்லாம் அவனாக எழுதினதோ இல்லைன்னா எங்கையாவது பார்த்தெழுதினதோ தெரியவில்லை..

ஆனால் அவன் எனக்கும் அதைத்தரும்போது சொன்னான்...டேய் பிகர மடக்கனும் என்னா முக்கியமாக உனக்கு பேச்சுத்திறமையிருக்கனும்..அடிக்கடி ஜஸ்வைக்கத்தெரியனும்..அப்படியே இந்தகவிதைகளையெல்லாம் பாடமாக்கி வைத்துக்கொள்..அவங்களோட கதைக்கும் போது இடைக்கிடையில நீயா யோசிக்கிற மாதிரி பாவ்லா காட்டிட்டு ஒவ்வொரு கவிதையா எடுத்து விடு..அப்புறம் பாரு என்று சொன்னார்..நாங்களெல்லாம் ஒரு பொண்ணுகூட கதைக்கிறதே பெரியவிடயம் அதில எங்க கவிதை சொல்லிறது..உங்களுக்கு உபயோகப்படுமா என்று பாருங்கள்..


உன்னுடைய உதடுகள் உச்சரிக்கும் வரை நான் உணர்ந்ததில்லை என்னுடைய பெயர் இத்தனை அழகாய் இருக்கிறது என்று!!


என்னடி இது நியாயம்??? என் இதயத்தை திருடியவள் நீ தனிமை சிறையில் தண்டனை பெறுவது நானா???


என் மனம் உன்னிடம் உள்ளபோதும் ஏன் என் மனம் உனக்கு புரியவில்லை..


நினைக்கவில்லை... உன்னை நினைக்கவில்லை... மறந்தால்தானே உன்னை நினைப்பதற்க்கு!..

இதுக்குமேல அதில இருக்கதெல்லம் அவர் கஸ்டப்பட்டு கண்டுபிடித்த தொழில்முறை ரகசியங்கள்..அதைவெளியே சொல்லவது சரியில்லை..எனினனும் எல்லோருக்கும் தொரிந்த இலகுவான இரண்டு ஜடியாவை எழுதுகின்றேன்... அது ஒன்னுமில்லைங்க சினிமா டயலாக்குகளை அப்படியே உல்டா பண்ணிறது தான்..இது பெண்களுக்கு பிடிக்குமாம்..உதாரணத்திற்க்கு ...மாலினி நீ ரொம்ப அழகு....அல்லது நான் உன்னை காதலிக்கிறன் என்று நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்திடுமோ என்று பயமாயிருக்கு அப்படியிப்படின்னு அடிச்சுவிடுங்க..அப்புறம் பாடல்களையும் சுடவேண்டியது தான்.... வெயிலில் நீ நடக்கையலில் எனக்கு வேர்வைவரும் மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்.. உடல்கல்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று..........................(உங்கள் காதலியின் பேயரினை ரெண்டு தரம் எழுதவும்..) இதைவிட மேலதிக தகவல்களுக்கு எனது காதல்குரு தர்சனிடம் வினவுங்கள்...

11 comments:

பாலா said...

எனக்கு இனிமே.. இந்தப் பதிவு யூஸ் ஆகாதே! :( :( :(

எதுக்கும் நோட் பண்ணிக்கிறேன். :)

Keddavan said...

ஹஹாஹா இளைஞர்களுக்காகத்தான் எழுதினது..நீங்கள் உங்கட மனைவியிடம் இதனைவச்சு நல்ல பேர் எடுக்க முயற்ச்சி பண்ணலாம்..

பூங்குன்றன்.வே said...

ரைட்...போலாம்..பக்கத்துக்கு தெரு காலேஜ் முடியரம் நேரம்,சிட்டுக்களை பார்க்க நீங்கள் தந்த கவிதைகளை நோட் பண்ணிட்டு போறேன் :)

Keddavan said...

யாரு உங்களுக்கு நாங்களா கவிதை சொல்லிக்கொடுக்கனும்..கவிதைல நீங்க மலை..நாங்க இப்பதான் நண்பனிட கடன்வாங்கிட்டு இருக்கம்...

கமலேஷ் said...

இளைஞர்களுக்கு ரொம்ப முக்கியமான விசயம்தான்...
முயற்சி பண்ணி பார்த்துர வேண்டியதுதான்..

Keddavan said...

முயற்ச்சி பண்ணி பார்த்திட்டு சொல்லுங்க...வேலைக்காகுதா இல்லை விளக்குமாறு பிஞ்சுதா என்று...

U.P.Tharsan said...

யாரப்பா அந்த தர்சன் ?

Keddavan said...

குருவே வந்திட்டிங்களா...உங்க மகிமையில சிலதை சும்மா சொல்லிவைச்சன்...அவ்வளவுதான்..

U.P.Tharsan said...

//பல்லாண்டுகளுக்கு முன்னர்//
ஆமா கி.மு 100

அடேய் இவ்வளவு ஜடியாக்களை தந்தும் நீ என்னும் ஒன்டையும் உருப்படியா செய்யலையே.... நீ எல்லாம் என்ட சிஷ்யன் என்று சொல்லாத... :-))

Anonymous said...

tharsan mathavanda thambi enda neenga sooriyada annanaa??
sooperapu


pungayuran

வான்முகில் said...

tharsan mathavanda thambi enda neenga sooriyada annanaa??
sooperapu